உள்ளூர் செய்திகள்

சின்ன சேலத்தில் தொடர் வழிப்பறியால் பொதுமக்கள் அச்சம்

Published On 2022-10-21 08:28 GMT   |   Update On 2022-10-21 08:28 GMT
  • ரூ. 64 ஆயிரம் செல்போன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர்.
  • சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி:

சின்ன சேலத்தில்கடந்த 15-ந் தேதி அன்று மகேஸ்வரி என்ற மூதாட்டியிடம் ரூ. 64 ஆயிரம் செல்போன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர். இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆன நிலையில் இதே சின்னசேலம் பகுதியை சேர்ந்த கோவைக்கண்ணி மூதாட்டி கழுத்தில் தாலிச் சங்கிலியை திருடி சென்றனர்.

இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார். தொடர்ந்து திருட்டு சம்பவம் சின்னசேலம் பகுதியில் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் தீபாவளி பண்டிகை நெருங்கவதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்ல அச்சத்தில் உள்ளனர். எனவே சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் காலை மாலை ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வங்கி பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News