உள்ளூர் செய்திகள் (District)

பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்லும் பெருந்தன்மைகூட ராகுலுக்கு இல்லை-குஷ்பு

Published On 2024-06-11 07:48 GMT   |   Update On 2024-06-11 07:48 GMT
  • பாராளுமன்றத்தில் வெற்றுக் கூச்சல் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
  • மக்கள் பிரதிநிதிகளாக யார் வந்தாலும் சரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

சென்னை:

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் பதவி ஏற்று சாதனை படைத் துள்ளார். உலக தலைவர்கள் எல்லாம் வாழ்த்து தெரி வித்துள்ளாகள்.

ஆனால் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை விரும்பும் ராகுல் காந்தி வாழ்த்து சொல்லவில்லை. நாட்டின் பிரதமருக்கு வாழ்த்து சொல்லும் பெருந்தன்மைகூட இல்லாத ராகுல் எதிர்கட்சி தலைவராகி என்ன செய்யப்போகிறார்.

இதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத்தை கட்சி பாகுபாடு பார்க்காமல் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி வாழ்த்தியதை கேட்டு அவர் கண் கலங்கினார்.

எதிர்கட்சியாக இருப்பது ஆளும்கட்சியை எதிர்ப்பதற்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். பாராளுமன்றத்தில் வெற்றுக் கூச்சல் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நல்ல திட்டங்கள் வந்தால் ஆதரிக்கவும் வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளாக யார் வந்தாலும் சரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News