உள்ளூர் செய்திகள் (District)

இடித்தாக்கி பசுமாடு சாவு

Published On 2023-10-31 09:49 GMT   |   Update On 2023-10-31 09:49 GMT
  • மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தபோது விபரீதம்
  • கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்

காவேரிப்பாக்கம்:

நெமிலி அருகே உள்ள வேப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. விவசாயி, இவர் தனது பசுமாட்டை அருகிலுள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த சத்தத்துடன் இடி பசுமாட்டின் மீது விழுந்ததில் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த் துறையினர் பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் பசுமாட்டை பரிசோதனை செய்தனர்.

Tags:    

Similar News