உள்ளூர் செய்திகள்

வனத்துறை ஏலத்தை புறக்கணித்து வெளியேறிய ஒப்பந்ததாரர்கள்.

வன அலுவலகத்தில் ஏலத்தை புறக்கணித்த ஒப்பந்ததாரர்கள்

Published On 2022-10-08 08:04 GMT   |   Update On 2022-10-08 08:04 GMT
  • சிவகங்கை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் ஏலத்தை புறக்கணித்தனர்.
  • நிதி இழப்பீடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட வன அலுவலகத்தில் 7 கண்மாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டுவதற்கான ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் டெண்டர் எடுக்க 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.

ஒக்கூர் சிறுகுளம், கரையகுடி, திருமலை ஊராட்சி திருமலை கண்மாய், அண்டகுடி பீதாம்பரனேந்தல் கண்மாய், செய்களத்துார் நத்தபுரக்கி கண்மாய், திருப்பத்தூர் அருகே உள்ள ஏ.தெக்கூர் பாண்டி கண்மாய், சிராவயல் காணிக் கண்மாய் போன்ற 7 கண்மாய் ஏலத்தில் 3 கண்மாய்கள் மட்டும் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதை கண்டித்து ஒப்பந்ததாரர்கள் ஏலத்தை புறக்கணித்து வெளியேறினார்.

4 கண்மாய் ஏலம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அரசு ஒதுக்கி உள்ளதாகவும், எஞ்சியுள்ள தெக்கூர் பாண்டி கண்மாய், சிராவயல் தாணிக்கண்மாய், திருமலை கண்மாய் ஆகிய 3 கண்மாய்களுக்கு மட்டும் ஏலம் நடைபெறுவதாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

மீதமுள்ள 4 கண்மாய்கள் மரங்களை அகற்றிக் கொள்ள அந்த உரிமையை ஊராட்சிக்கே வழங்கப் பட்டுள்ளது. இதனால் எஞ்சிய 3 கண்மாயை ஏலம் கேட்கலாம் என தெரிவித்தார். ஆனால் ஏலதாரர்கள் அனைத்து கண்மாய்களையும் ஏலம் விடாவிட்டால் ஏலத்தை புறக்கணிப்பதாக கூறி வெளியேறினர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரர் துபாய் காந்தி கூறுகையில், வன அலுவலகத்தில் பொது ஏலம் நடந்தால் அதிக தொகைக்கு போகும். ஊராட்சி மன்றங்களில் ஏலம் விடுவதால் முறைகேடுகள் நடப்பதுடன், அரசுக்கும் நிதி இழப்பு ஏற்படும்.

குத்தகை வருவாயில் 65 சதவீத தொகையை ஊராட்சிக்கு ஒதுக்க வேண்டும். அதற்காக அந்த கண்மாய்களை சொற்ப தொகைக்கு வழங்கி, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்துகின்றனர்.

அனைத்து கண்மாய்க ளையும் பொது ஏலம் விட்டால் அதிக தொகைக்கு ஏலம் போகும். அதன்மூலம் ஊராட்சிக்குதான் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதை கண்டித்து தான் ஏலத்தை புறக்கணித்தோம் என்றார்.

Tags:    

Similar News