உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

நத்தம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2023-08-05 13:02 IST   |   Update On 2023-08-05 13:02:00 IST
  • மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
  • இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களி லிருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

நத்தம்:

நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களி லிருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

இதைப்போலவே பகவதி,காளியம்மன், தில்லைகாளியம்மன் ஆகிய கோவில்களிலும் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News