உள்ளூர் செய்திகள் (District)

திட்டக்குடி அருகே பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2023-10-01 09:38 GMT   |   Update On 2023-10-01 09:38 GMT
  • சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது.
  • பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

கடலூர்:

திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமிக்கு மக்கள் நலன் பெற வேண்டி பால், தயிர், மஞ்சளால் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. 12 மணி அளவில் மூலவர் சஞ்சீவி ராய பெருமாளுக்கு மகா தீபாரதனை நடந்தது.

மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட சஞ்சீவி ராய பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளித்தார். மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தா்கள் மாவிளக்கு ஏற்றியும், சக்கரை பொங்கல், சுண்டல் வைத்து பெரு மாளுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

இதேபோல் திட்டக்குடி, ராமநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News