உள்ளூர் செய்திகள்

2 சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம்... வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2024-09-07 09:34 GMT   |   Update On 2024-09-07 09:34 GMT
  • சென்னை, பழனி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
  • கைதான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் 2 பேர் கடந்த வாரம் திடீரென மாயமானார்கள். இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சிறுமிகள் இருவரும் திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியில் இருப்பது கேரள போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் சிறுமிகளுடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் என்ற 2 வாலிபர்கள் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து திருமுருகன்பூண்டிக்கு விரைந்த கேரள போலீசார், அங்கிருந்த 2 சிறுமிகளை மீட்டதுடன், சிறுமிகளை திருப்பூருக்கு அழைத்து வந்த அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர்கள் இருவரும் ஆசை வார்த்தை கூறி சிறுமிகளை அழைத்து வந்ததும், பின்னர் சென்னை, பழனி உள்ளிட்ட இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. செலவுக்கு பணம் இல்லாததால் திருப்பூருக்கு சிறுமிகளுடன் வேலை தேடி வந்தபோது நண்பர்கள் உதவியுடன், திருமுருகன்பூண்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்குள்ள குடிநீர் பாட்டில் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கைதான வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News