உள்ளூர் செய்திகள்

மதுரவாயலில் திருட சென்ற வீட்டில் நகை-பணம் இல்லாததால் பொருட்களை நொறுக்கிய கொள்ளையர்கள்: 2 பேர் கைது

Published On 2022-07-27 09:14 GMT   |   Update On 2022-07-27 09:14 GMT
  • வீட்டில் இருந்த பொருட்களும் நொறுக்கப்பட்டு இருந்தது.
  • மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

போரூர்:

மதுரவாயல், பாரதிநகர், 3-வது தெருவில் வசித்து வருபவர் கருணாநிதி பாண்டே. எலக்ட்ரீசியன். இவரது சொந்த ஊர் உத்தர பிரதேச மாநிலம் ஆகும்.

இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் கருணாநிதி பாண்டே திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவும் உடைக்கபட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் நொறுக்கப்பட்டு இருந்தது.

வீட்டில் நகை-பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பொருட்களை நொறுக்கி சூறையாடிவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆகாஷ் என்கிற விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News