உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாணவர் பலி

Published On 2023-03-13 05:27 GMT   |   Update On 2023-03-13 05:27 GMT
  • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் விபத்தில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம்:

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாகித்தியன். இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடையநல்லூரில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே வரும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் விபத்தில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News