உள்ளூர் செய்திகள் (District)

பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய 2 பேர் கைது

Published On 2023-05-14 09:30 GMT   |   Update On 2023-05-14 09:30 GMT
  • சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • 2 பேரை நிறுத்தி சோதனை செய்த போது அவர்கள் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்ததது தெரிய வந்தது.

பெரியபாளையம்:

பெரியபாளையம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்த போது அவர்கள் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்ததது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்லப்பா ஜனப்பன் சத்திரம், கிருபா நகரைச் சேர்ந்த சிவா என்பது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி கடையில் குட்கா பதுக்கி விற்ற நெய்வேலி கிராமத்தை சேர்ந்த அலி என்பவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News