உள்ளூர் செய்திகள்

பூக்குழி திருவிழா- அரிவாள் மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய கோவில் பூசாரி

Published On 2022-08-12 10:08 GMT   |   Update On 2022-08-12 10:08 GMT
  • கடந்த 5-ந்தேதி கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விழா நாளான இரவு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
  • அரிவாள்கள் மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறி பக்தர்கள் மீது மலர் தூவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்புசாமி மற்றும் கள்ளழகர், கோவில் பூக்குழி திருவிழா ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமி அன்று நடைபெறுவது வழக்கம். கடந்த 5-ந்தேதி கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய விழா நாளான இரவு பூக்குழி திருவிழா நடைபெற்றது. அரிவாள்கள் மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறி பக்தர்கள் மீது மலர் தூவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Tags:    

Similar News