உள்ளூர் செய்திகள்

தந்தி மாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவ திருவிழா

Published On 2023-05-16 09:12 GMT   |   Update On 2023-05-16 09:12 GMT
  • தேர் திருவிழா உற்சவம் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி நடந்தது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

குன்னூர்,

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தமிழக அரசின் இந்துசமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் தேர் திருவிழா உற்சவம் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி நடந்தது. தேர்த்திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தது.

குன்னூரில் அனைத்து மதத்தினரும் இணைந்து நடத்தக்கூடிய தேர் திருவிழா இதுவாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News