உள்ளூர் செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

Published On 2023-06-28 09:20 GMT   |   Update On 2023-06-28 09:20 GMT
  • நேற்று வீட்டின் மேல் இருந்து தவறி விழுந்தார்.
  • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஸ் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தென்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது45).

இவரது வீடு ஒன்றை கட்டி வருகிறார். நேற்று வீட்டின் மேல் இருந்து தவறி விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஸ் உயிரிழந்தார்.

இது குறித்து தளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News