உள்ளூர் செய்திகள்

கோவையில் ஓடும் பஸ்சில் முதியவரிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு

Published On 2023-05-16 09:20 GMT   |   Update On 2023-05-16 09:20 GMT
  • பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணத்தை திருடியுள்ளனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை வெள்ளைகிணறு பிரிவு பகுதியை சேர்ந்தவர் அருணகிரி (60). இவர் நடத்தும் கடையின் வாடகையை கொடுப்பதற்காக கோவையில் இருந்து திருப்பூர் செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலில் இருந்து கீழே இறங்கிய அருணகிரி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் பணத்தை பறித்து சென்றதை அறிந்த அவர் உடனடியாக இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News