உள்ளூர் செய்திகள் (District)

கந்த சஷ்டியை ஒட்டி முருகன் கோவிலில் சாமி திருக்கல்யாணம் நடைபெற்ற காட்சி.

அரூர் முருகன் கோவிலில் திருக்கல்யாண விழா

Published On 2023-11-21 10:00 GMT   |   Update On 2023-11-21 10:00 GMT
  • பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
  • வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது

அரூர்,

அரூர் மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி சூரசம்ஹாரம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றது.

கடந்த 13.11.23ம் தேதி தொடங்கிய விழா விக்னேஷ்வர பூஜை, ஹோம பூஜைகள் ஆகியவற்றுடன் 18ம் தேதி கந்த சஷ்டி விழாவும் நேற்று 20.11.23சுவாமி திருக்கல்யாணமும் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட வாகன த்தில் சுவாமி திருவீதி உலா வும் நடைபெற்றது.

அர்ச்ச கர்கள் விஜயகுமார், லோக நாதன் ஆகியோர் சுவாமி திருக்கல்யாணத்தை நடத்தி னர். முல்லைரவி தலை மையில் விழா குழுவினர் செல்வதயாளன், விஸ்வ நாதன், சிவபிரகாசம், பத்ம நாபன் ஆகியோர் ஏற்பாடு களை செய்திருந்தனர்.

Tags:    

Similar News