உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவிலில் நெகிழிப்பை பயன்பாட்டை தடுக்க கோரி மனு

Published On 2023-05-13 06:44 GMT   |   Update On 2023-05-13 06:44 GMT
  • பயன்படுத்துவோர் கடைவீதிகள், தெருக்கள், தோட்டங்கள், வயல்வெ ளிகளில் வீசி செல்கின்றனர்.
  • கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் பகுதியில் நெகிழிப்பைகள் அதிக அளவில் பயன்படுத்த ப்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்துவோர் கடைவீதிகள், தெருக்கள், தோட்டங்கள், வயல்வெ ளிகளில் வீசி செல்கின்றனர். இதனால் சுற்றுபுற சூழல் கெடுவதோடு மண் வளமும் பாதிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

நீர் நிலைகள் மாசுபடும் அடைகிறது. ஆகவே அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பினர் வெள்ளகோவில் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News