உள்ளூர் செய்திகள்

சுடுகாடு மற்றும் சாலை வசதி வேண்டி நரிக்குறவர் இன மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை

Published On 2023-04-21 11:41 GMT   |   Update On 2023-04-21 11:42 GMT
  • மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
  • ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

பொன்னேரி:

சோழவரம் அடுத்த பண்டிகாவனுர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தி விநாயகர் நகரில் சுமார் 50 ஆண்டுகளாக 100 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இந்த ஊராட்சியில் இருந்து மஞ்சங்கரணை ஊராட்சியில் சுடுகாட்டை பயன்படுத்தி வருவதால் பல்வேறு பிரச்சனை ஏற்படுவதாக கூறி தங்களுக்கு தாங்கள் பகுதியிலே சுடுகாடு மற்றும் சாலை வசதி அமைத்து தரக்கோரி பல்வேறு மனு அளித்தும் மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்பு அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனர் மனுமீது ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் விரைவில் தாங்கள் பகுதிக்கு சுடுகாடு மற்றும் சாலை வசதி அமைக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என நரிக்குறவர் இன மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News