செய்திகள்

பீகார்: மாவோயிஸ்ட்டுகள் உடனான துப்பாக்கிச் சண்டையில் ஒரு பாதுகாப்புப்படை வீரர் உயிரிழப்பு

Published On 2018-01-02 18:21 GMT   |   Update On 2018-01-02 18:21 GMT
பீகாரின் கயா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பாதுகாப்புப்படை வீரர் உயிரிழந்தார்.
பாட்னா:

ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்ட்டு இயக்கத்தினர் பிரபல தொழிலதிபர்கள், பெரும் முதலாளிகளை மிரட்டி கப்பம் வசூலித்து வருகின்றனர். இவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய மறுப்பவர்களை கடத்திச் சென்று பிணைத்தொகை கேட்டு மிரட்டுவதும், பணம் கிடைக்காவிட்டால் கொன்று விடுவதும் வழக்கமாக உள்ளது.

மேலும், தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் சொத்துகள் மீது வெடிகுண்டுகளை வீசியும் நாசப்படுத்துகின்றனர். இந்த கும்பல்களை ஒடுக்குவதற்காக போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பினரும் மரணமடைகின்றனர்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள சக்ரபந்தா காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்ட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் ஆஷிஷ் பத்ரா என்னும் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார். உடனடியாக அவரை விமானம் மூலம் ராஞ்சி  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

#tamilnews #Bihar #Maoist #CRPFjawankilled
Tags:    

Similar News