செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் பள்ளி பேருந்தின் மீது லாரி மோதி கோர விபத்து - 5 குழந்தைகள் பலி

Published On 2018-01-05 12:31 GMT   |   Update On 2018-01-05 12:31 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிப் பேருந்தானது மாணவர்களை ஏற்றிக்கொண்டு கனடியா சாலையில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த சரக்கு லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கோரவிபத்தில் 5 பள்ளி மாணவர்கள், பேருந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.



இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Tags:    

Similar News