செய்திகள்

உ.பி. மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்துகளில் 10 பேர் பலி

Published On 2018-03-25 13:01 GMT   |   Update On 2018-03-25 13:02 GMT
உத்தரபிரதேசம் மாநிலத்தில் இன்று நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்துக்கு உட்பட்ட பஜோய் பகுதியில் இன்று கார் மீது லாரி மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதேபோல், சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள பார்கார் பகுதியில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் உயிரிழந்தனர். காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #tamilnews 

Tags:    

Similar News