இந்தியா

மாநகராட்சி அதிகாரி வீட்டில் ரூ.6 கோடி மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்

Published On 2024-08-10 06:55 GMT   |   Update On 2024-08-10 06:55 GMT
  • மனைவி மற்றும் தாயார் பெயரில் ரூ.1.10 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
  • லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாநகராட்சி கண்காணிப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரியாக இருப்பவர் தாசரி நாகேந்திரன்.

இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நாகேந்திரன் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.


படுக்கைக்கு அடியில் இருந்த பெட்டியில் ரூ.2.93 கோடி ரொக்கமும், ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், மனைவி மற்றும் தாயார் பெயரில் ரூ.1.10 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும் ரூ.1.98 கோடி மதிப்புள்ள 17 அசையா சொத்துக்கள் வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தாசரி நாகேந்திரன் வீட்டில் மொத்தம் ரூ 6 கோடி மதிப்பிலான பணம் நகைகள் மற்றும் சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News