இந்தியா
ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு - அரசு அறிவிப்பு

ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு - அரசு அறிவிப்பு

Published On 2025-03-24 18:03 IST   |   Update On 2025-03-24 18:03:00 IST
  • இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது.
  • ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த நிதியாண்டில் சாதி கணக்கெடுப்பை நடத்தப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா இன்று சட்டமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இன்று பட்ஜெட் கூட்டத்தின்போது சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரதீப் யாதவ், கடந்த வருடம் பிப்ரவரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரை அதில் என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என அரசு விளக்க வேண்டும்.

தெலுங்கானா மாநிலம் நம்மை விட தாமதமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது, அதன் அறிக்கையும் கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் தீபக் பிருவா, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பணி மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அடுத்த நிதியாண்டில், எங்கள் அரசு சாதி கணக்கெடுப்பு பணியைத் தொடங்கும்.

இதற்கான பொறுப்பு எந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுவது என்பதை முடிவு செய்வதற்கான செயல்முறை நடந்து வருகிறது.  சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை, பணியின் அளவுகள் மற்றும் நிதி அம்சத்தை உறுதி செய்வதற்கான பொறுப்பு மாநில பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4ஆம் தேதி  ஒரு நிறுவனத்தை பணியமர்த்த இந்த துறை மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக பிருவா கூறினார்.

Tags:    

Similar News