தமிழ்நாடு (Tamil Nadu)
null

தேசத் தந்தை முகத்தில் விழிக்காத பாசிஸ்டுகள் - பாராளுமன்ற காந்தி சிலை இடமாற்றம் குறித்து சு.வெங்கடேசன்

Published On 2024-10-02 08:52 GMT   |   Update On 2024-10-02 08:53 GMT
  • பாராளுமன்ற வளாகத்தில் வாசலின் முன் இருந்த காந்தி சிலை பின்னால் உள்ள பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
  • எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி இன்று [அக்டோபர் 2] கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தியின் திரு உருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறனர். ஆனால் பாராளுமன்ற வளாகத்தில் வாசலின் முன் இருந்த காந்தி சிலை உட்பட வெவ்வேறு இடங்களுக்கு இருந்த தலைவரின் சிலைகள் கட்டடத்தின் பின்னே உள்ள பூங்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

பாஜக அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. அந்த வகையில் தற்போது காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது. பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிற பொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள். நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை. வாழ்க நீ எம்மான்.

என்றென்றும் வணங்குகிறோம் உன்னை.

என்று தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News