இந்தியா

பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி அமைப்பு: கூட்டணி கட்சிகளுக்கும் இடம்

Published On 2024-07-03 15:45 GMT   |   Update On 2024-07-03 15:45 GMT
  • கமிட்டியில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவ சேனா, லோக் ஜனசக்தி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர்.
  • பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராம்.

மோடி தலைமையிலான அரசு பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியை அமைத்துள்ளது.

இந்த கமிட்டியில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவ சேனா, லோக் ஜனசக்தி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராம், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், ஹெச்.டி. குமாரசுவாமி இடம் பிடித்துள்ளனர்.

அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியில் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா, கிஞ்ஜரபு ராம் மோகன் நாயுடு, ஜித்தன் ராம் மாஞ்சி, சர்பனந்தா ஸ்னோவால், பூபேந்தர் யாதவ், அன்னபூர்னா தேவி, கிரண் ரிஜிஜு, கிஷன் ரெட்டி இடம பிடித்துள்ளனர்.

பாராளுமன்ற விவகாரத்துக்கான கேமினட் கமிட்டியில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜிவ் ரஞ்சன் சிங், நாயுடு, ரிஜிஜு, வீரேந்திர குமார், ஜூயல் ஓரம், சிஆர் பாட்டில் இடம் பிடித்துள்ளனர்.

Tags:    

Similar News