இந்தியா

மருந்து பாட்டிலை விழுங்கிய பாம்பு- வீடியோ வைரல்

Published On 2024-07-05 05:02 GMT   |   Update On 2024-07-05 05:02 GMT
  • மூச்சு விட முடியாமல் பாம்பு தவித்து கொண்டிருந்தது.
  • வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாகப்பாம்பு ஒன்று, தூக்கி எறியப்பட்ட இருமல் மருந்து பாட்டிலை விழுங்கி உள்ளது. அந்த பாட்டில் பாம்பின் தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் பாம்பு தவித்து கொண்டிருந்தது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த தன்னார்வலர்கள் கொக்கி முனையால் நாகப்பாம்பின் கீழ் தாடையை மெதுவாக விரித்து அந்த பாட்டிலை எடுத்தனர். பின்னர் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

இதுகுறித்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News