இந்தியா (National)

அரியானா சட்டசபை தேர்தல்: 66 சதவீதம் வாக்குகள் பதிவு

Published On 2024-10-05 20:28 GMT   |   Update On 2024-10-05 20:28 GMT
  • அரியானா தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட உள்ளது.

சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அங்கு பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் 2 முறை ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.

முதல் மந்திரி நயாப் சிங் சைனி, முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத், ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 1027 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மக்கள் வாக்களிக்க வசதியாக 20,632 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், அரியானா மாநில தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News