இந்தியா

ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதால் 133 மாணவர்களும் பள்ளியை மாற்றிய வினோதம்

Published On 2024-07-05 05:05 GMT   |   Update On 2024-07-05 05:05 GMT
  • வாத்தியார்னா இப்படித்தான் இருக்கணும்.
  • பிடித்த ஆசிரியர் மாறி சென்றால் மாணவர்களிடம் வருத்தம் இருக்கும்.

ஐதராபாத், ஜூலை.5-

பள்ளியில் கண்டிப்பாக இருக்கும் ஆசிரியர் இட மாற்றம் செய்யப்பட்டால் மாணவர்கள் 'ஹையா... இனி ஜாலிதான்...' என்று உற்சாகமாக கொண்டாடு வார்கள்.

ஆனால் ஒரு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்ட தும் நாங்களும் அவருடன் அந்த பள்ளிக்கு செல்கி றோம் என்று புறப்பட்ட 133 மாணவர்களை பார்த்ததும் வாத்தியார்னா இப்படித் தான் இருக்கணும் என்று ஒட்டுமொத்த கல்வித் துறையையும் கர்வப்பட வைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியில் மாவட்டம் பொனகல் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்கள் ஸ்ரீனிவாசன் (53).

அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு ஸ்ரீனிவாஸ் வெறும் ஆசிரியர் மட்டுமல்ல. பெற்றோர், பாதுகாவலர், குழந்தைகளின் மனம் கவர்ந்த ஆசிரியர் என்று பல முகங்கள் கொண்டவர். அரசு பள்ளிதானே... கட மைக்கு வேலை செய்தால் போதும். மாத கடைசியில் எப்படியும் சம்பளம் வந்து விடப் போகிறது என்று நினைக்காதவர்.

மாணவர்கள் படிப்பு முதல் ஒழுக்கம் வரை கடைபிடிப்பதில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார். அதே நேரம் ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு உறவினர் போல் பரிவுகாட்டி பழகுவார்.

ஒரு மாணவர் ஒரு நாள் பள்ளிக்கு வரவில்லை என்றாலும் உடனடியாக பெற்றோரை தொடர்பு கொண்டு விசாரிப்பார். ஏதாவது காரணங்களால் பள்ளிக்கு வராமல் இருந் தால் நேரடியாக வீடுகளுக்கு சென்று பேசி பிரச்சினை களை தீர்த்து பள்ளிக்கு வரவழைப்பார்.

தினமும் ஆசிரியர் ஸ்ரீனி வாசை பார்த்தால் மாணவர் களுக்கு சந்தோசம். அதே போல்தான் ஸ்ரீனிவாசுக்கும்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் அக்காபெல்லிகுடா என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு இடமாறுதல் செய்யப் பட்டார். தற்போது வேலை பார்க்கும் பள்ளியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அந்த பள்ளி உள்ளது.

தங்கள் ஆசிரியர் இட மாற்றம் செய்யப்பட்டதும் மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறிவிட்டனர். நீங்கள் போக வேண்டாம் சார் என்று கெஞ்சினார்கள். இந்த தகவலை அறிந்த பெற்றோர்களும் பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள்.

இடமாற்றத்தை எதுவும் செய்ய முடியாது என்பதை மாணவர்கள் 133 பேரும் உணர்ந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆசிரியர் இடம் மாற்றம் செய்யப்பட்ட அதே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்கள்.

மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியர் மாறி சென்றால் மாணவர்களிடம் வருத்தம் இருக்கும். சில நாட்களில் அதுவும் சரியாகி விடும். ஆனால் ஆசிரியர் மாறிச் சென்ற அதே பள்ளியில் இப்படி ஒட்டுமொத்த மாணவர்களும் விலகி அந்த ஆசிரியருடன் சென்று இருப்பது நாங்கள் எங்குமே இதுவரை கேள்விப்பட வில்லை என்று மாவட்ட கல்வி அதிகாரி யாதையா தெரிவித்தார்.

வாத்தியார்னா இப்படித்தான் இருக்கணும் என்று அவர் பெருமையுடன் கூறினார்.

ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் மிகவும் அடக்கத்துடன் கூறியதாவது:-

பெற்றோர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக் கையை காட்டுகிறது. என திறமைக்கு ஏற்ப கற்பிப்பதை கடமையாக செய்தேன். அவர்கள் என்னை விரும்பி னார்கள். அரசு பள்ளிகளும் நல்ல தரமாக உள்ளன. எனவே பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News