இந்தியா

ஆந்திர தலைநகராக திருப்பதியை மாற்றுவோம்- முன்னாள் மத்திய மந்திரி

Published On 2024-02-04 12:29 IST   |   Update On 2024-02-04 12:40:00 IST
  • கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் இதுவரை முடிவாகவில்லை.
  • ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு நினைவாக தவறிவிட்டது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திராவின் தலைநகராக அறிவித்தார்.

அடுத்து ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவிற்கு 3 தலை நகரங்கள் என அறிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் இதுவரை முடிவாகவில்லை.


இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி சிந்தா மோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதி தலைநகராக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி 3 தலை நகரங்களை அறிவித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். இதனால் ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு நினைவாக தவறிவிட்டது.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தி திருப்பதியை தலைநகராக மாற்றுவோம் என்றார்.

Tags:    

Similar News