இந்தியா (National)

ஒருவரை ஹிப்னாடிசம் செய்து 98,000 ரூபாய் பணத்தை பறித்த கும்பல்

Published On 2024-10-02 01:26 GMT   |   Update On 2024-10-02 01:26 GMT
  • தன்னை ஹிப்னாடிசம் செய்து ரூ.98,000 பணம் பறித்ததாக ஒருவர் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார்.
  • கைது செய்யப்பட்டவர்களின் இருந்து ரூ.27,000 பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

சமூக ஊடகங்களில் தன்னுடன் நட்பாகப் பழகிய சிலர் தன்னை ஹிப்னாடிசம் செய்து ரூ.98,000 பணம் பறித்ததாக ஒருவர் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார்.

அவரது புகாரில், 3 பேர் தன்னை ஹிப்னாடிசம் செய்து வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ. 98,000 பணத்தை மாற்றி மோசடி செய்தாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் வினய் (24), நவீன் (24), ரோஹித் (24), ஆகாஷ் (22) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் இருந்து ரூ.27,000 பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

Tags:    

Similar News