இந்தியா

ஆந்திராவில் திருநங்கைகள் உடல், மனரீதியான பாதிப்பு- உதவி எண் 1091-ல் புகார் அளிக்கலாம்

Published On 2023-05-19 06:57 GMT   |   Update On 2023-05-19 06:57 GMT
  • திருநங்கைகள் பாதுகாப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சி.ஐ.டி., மகளிர் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., கே.ஜி.வி.சரிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருநங்கைகள் பாதுகாப்பு உதவி எண் 1091 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வது, துன்புறுத்துவது அவர்களுக்கு மன நிதியாக ரீதியாக தொல்லை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குண்டூரில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் இதற்காக சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் பாதுகாப்பு உதவி எண் 1091 அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. இதில் திருநங்கைகள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை தொடர்பு கொண்டு கூறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

திருநங்கைகள் பாதுகாப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சி.ஐ.டி., மகளிர் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., கே.ஜி.வி.சரிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநங்கைகள் பாதுகாப்பு சட்டபடி இந்த உதவி மையம் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண் என்பதாலும், கட்டணம் ஏதும் இல்லை என்பதாலும் திருநங்கைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

திருநங்கைகளுக்கும் சுயமரியாதை உள்ளது. அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் இதன் மூலம் தண்டிக்கப்படுவார்கள்.

இந்த எண் திருநங்கைகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று சரிதா தெரிவித்தார்.

Tags:    

Similar News