விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் அரையிறுதிக்கு முன்னேறினார் அமன் ஷெராவத்

Published On 2024-08-08 11:02 GMT   |   Update On 2024-08-08 11:05 GMT
  • இந்திய வீரர் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
  • மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இன்று இரவு அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.

பாரீஸ்:

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியன் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

இறுதியில், அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று இரவு 9.45 மணிக்கு அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.

Tags:    

Similar News