கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

Published On 2025-02-22 14:06 IST   |   Update On 2025-02-22 14:06:00 IST
  • பேட் கம்மின்ஸ் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
  • 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதில்லை.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லாகூரில் நடக்கும் இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. 

பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகினர். இது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

சமீபத்தில் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. இதனால் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியில் முழு திறமையை வெளிப்படுத்த போராடும்.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்தது. அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது.

Tags:    

Similar News