கிரிக்கெட்
null
புதிய பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியை கொண்டுள்ளனர்- ரோகித் சர்மா
- டிராவிட்டுடன் ஒப்பிடும்போது கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர்.
- நல்ல புரிதல்தான் முக்கியம். அது கம்பீரிடம் இருக்கிறது.
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர்கள் வித்தியசமாக யுக்தியை கொண்டுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டிராவிட்டுடன் ஒப்பிடும்போது கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல புரிதல்தான் முக்கியம். கம்பீரிடம் அது இருக்கிறது.
நாட்டிற்காக விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இது ஆஸ்திரேலியா தொடருக்கான ஆடை ஒத்திகை அல்ல.
இவ்வாறு ரோகித் கூறினார்.