கிரிக்கெட் (Cricket)
ஓட்டப்பந்தய வீரர் போல ஓடி ரன் எடுக்கக் காத்திருந்த கிளென் பிலிப்ஸின் செயல் இணையத்தில் வைரல்
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது.
- இப்போட்டியில் இறுதியில் அதிரடியாக விளையாடிய கி ளென் பிலிப்ஸ் 49 ரன்கள் அடித்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் "ஏ" பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், "பி" பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் மோதின.
டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் இறுதியில் அதிரடியாக விளையாடிய கி ளென் பிலிப்ஸ் 49 ரன்கள் அடித்தார்.
இப்போட்டியில் கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் வேகமாக ஓடி ரன் எடுப்பதற்காக ஓட்ட பந்தய வீரர் போல பிலிப்ஸ் தயார் நிலையில் இருந்த வீடியோ இணையத்தில் வைரலானது.