கிரிக்கெட் (Cricket)

முதல் ஒருநாள் போட்டி.. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Published On 2025-02-06 07:56 IST   |   Update On 2025-02-06 07:56:00 IST
  • டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.
  • சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன் நடக்கும் ஒருநாள் தொடர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பதால், இந்த தொடரை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன.

Tags:    

Similar News