ஐ.பி.எல்.(IPL)
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரை வீசிய கோலி.. குழம்பிய ரசிகர்கள்
- முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில்174 ரன்கள் எடுத்தது.
- ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதல் ஓவரை ஆர்சிபி அணி வீரர் ஜோஷ் ஹேசல்வுட் வீசினார். ஆனால் அந்த ஓவரை விராட் கோலி வீசியதாக ஒளிபரப்பப்பட்டது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.