ஐ.பி.எல்.(IPL)
ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஐதராபாத்

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஐதராபாத்

Published On 2025-03-24 10:38 IST   |   Update On 2025-03-24 10:38:00 IST
  • ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.
  • ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் 34 பவுண்டரிகளை விளாசினர்.

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக், ஐதராபாத் அணியை முதலில் பேட் செய்ய பணித்தார். அதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது.

பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. கடந்த ஆண்டு 3 முறை 250 ரன்களை கடந்து இருந்த ஐதராபாத் ஐ.பி.எல். தொடரில் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் அதிக முறை 250 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது. அதற்கு அடுத்த இடத்தில் இந்திய அணி, கவுண்டி அணியான சுர்ரே (தலா 3 முறை) ஆகியவை உள்ளன.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் 34 பவுண்டரிகளை விளாசினர். 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரி இதுவாகும்.

ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி எடுத்த 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். ஏற்கனவே ஐதராபாத் அணி கடந்த ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.

Tags:    

Similar News