
ஐ.பி.எல். 2025: லக்னோவிற்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு
- அக்சர் படேல் தலைமையில் டெல்லி அணி முதன்முறையாக களம் இறங்குகிறது.
- லக்னோ அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் இடம் பெறவில்லை.
ஐபிஎல் 2025 சீசனின் 4-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி அணியில் கே.எல். ராகுல் இடம் பெறவில்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளது. இதனால் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணி விவரம்:-
மார்கிராம், மிட்செல் மார்ஷ், பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி ஷபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:-
மெக்கர்க், டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்.