விளையாட்டு

பாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் வெண்கலம் வென்றார் ஹகோடா

Published On 2024-09-07 00:56 GMT   |   Update On 2024-09-07 00:56 GMT
  • இந்தியா இதுவரை 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
  • இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், ஆண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் ஹகோடா சேமா வெண்கலப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 12-வது வெண்கலப் பதக்கம் ஆகும்.

ஈரான் தங்கமும், பிரேசில் வெள்ளிப் பதக்கமும் வென்றது.

நாகாலாந்தில் இருந்து பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News