விளையாட்டு

தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் கருணாகரன், சுப்ரமணியன்

Published On 2024-09-04 07:46 GMT   |   Update On 2024-09-04 07:46 GMT
  • கருணாகரன் தாய்லாந்தை சேர்ந்த கன்ட்போன் வாங்சரோயனை 24-22, 23-21 என வீழ்த்தினார்.
  • சங்கர் சுப்ரமணியன் பின்லாந்தைச் சேர்ந்த ஜோகிம் ஓல்டோர்ஃப்-ஐ 21-12, 19-21, 21-11 என வீழ்த்தினார்.

தைபே ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர்களான சதீஷ் குமார் கருணாகரன் மற்றும் சங்கர் சுப்ரமணியன் ஆகியோர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினர். அதவேளையில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வீராங்கனைகள் ஏமாற்றம் அடைந்தனர்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கருணாகரன் தாய்லாந்தை சேர்ந்த கன்ட்போன் வாங்சரோயனை எதிர்கொண்டார். இதில் கருணாகரண் 24-22, 23-21 என வெற்றி பெற்றார்.

சங்கர் சுப்ரமணியன் பின்லாந்தைச் சேர்ந்த ஜோகிம் ஓல்டோர்ஃப்-ஐ எதிர்கொண்டார். இதில் முதல் கேம்-ஐ சுப்ரமணியன் 21-12 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது கேம்-ஐ 19-21 என இழந்தார். இருந்தபோதிலும் வெற்றிக்கான 3-வது கேமில் சிறப்பாக விளையாடி 21-11 எனக் கைப்பற்றினார்.

மற்றொரு வீரரான கிரண் ஜார்ஜ் இந்தோனேசியாவின் யோகனஸ் சாயுட்டிடம் 21-15, 8-21, 16-21 என தோல்வியடைந்தார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆகார்ஷி காஷ்யப் 19-21, 18-21 என தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

தனியா ஹேமந்த் 11-21, 10-21 என எளிதில் தோல்வியடைந்ததார். சீன தைபே வீராங்கனை தை டிசு யிங் 27 நிமிடத்தில் வீழ்த்தினார்.

அனுபமா உபத்யாயாவை அமெரிக்க வீராங்கனை 17-21, 21-19, 21-11 என வீழ்த்தினார். முதல் கேம்-ஐ அனுபமா கைப்பற்றினாலும் அடுத்த இரண்டு கேம்களையும் இழந்தார்.

Tags:    

Similar News