விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-07-27 15:37 GMT   |   Update On 2024-07-27 15:37 GMT
  • பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வென்றார்.
  • இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதற்கிடையே, பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானை

21-8, 22-20 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, பிரான்சின் லூகாஸ் கோர்வீ-ரோனன் லபார் ஜோடியுடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News