டென்னிஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

Published On 2024-08-01 15:45 GMT   |   Update On 2024-08-01 15:45 GMT
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வென்றார்.
  • ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

இதில் அல்காரஸ் 6-3, 7-6 (9-7) என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியிடம் 5-7, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Tags:    

Similar News