டென்னிஸ்

நேஷனல் பேங்க் ஓபன்: சபலென்காவுக்கு அதிர்ச்சி தோல்வி அளித்த அமெரிக்கா வீராங்கனை

Published On 2024-08-11 10:05 GMT   |   Update On 2024-08-11 10:05 GMT
  • கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

டொரண்டோ:

கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிஸ்மோவா உடன் மோதினார்.

இதில் அனிஸ்மோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அனிஸ்மோவா, சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை சந்திக்கிறார்.

நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ரஷிய வீராங்கனை டயானா ஸ்னெய்டர், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார்.

Tags:    

Similar News