டென்னிஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2024-08-02 10:23 GMT   |   Update On 2024-08-02 10:23 GMT
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியா வீரர் ஜோகோவிச் வென்றார்.
  • ஸ்பெயின் வீரர் அல்காரஸ் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறினார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-3) என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியுடன் மோதுகிறார்.

Tags:    

Similar News