டென்னிஸ்

பாரீஸ் ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இகா ஸ்வியாடெக்

Published On 2024-08-02 14:39 GMT   |   Update On 2024-08-02 14:39 GMT
  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை வென்றார்.
  • இதன்மூலம் இகா ஸ்வியாடெக் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்லோவாகியா வீராங்கனை அன்னா கரோலினாவுடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

Tags:    

Similar News