தமிழ்நாடு (Tamil Nadu)
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2022-05-29 04:43 GMT   |   Update On 2022-05-29 04:43 GMT
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.36 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 312 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.

இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.36 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 312 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 750 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News