தமிழ்நாடு

விடுதலையை பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-08-15 03:54 GMT   |   Update On 2024-08-15 04:51 GMT
  • 300 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த சுதந்திரம் இது.
  • விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி.

சென்னை:

இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

* விடுதலையை பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்.

* 300 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த சுதந்திரம் இது.

* தியாகிகள் போராடிய நோக்கத்திற்காக உழைப்போம் என சுதந்திர நாளில் உறுதியேற்போம்.

* நேதாஜி படை நடத்தியபோது கரம் கோர்த்தவர்கள் தமிழர்கள்.

* அறவழியில் போராடிய காந்தியின் பின்னால் கரம் கோர்த்து நின்றது தமிழ்நாடு.

* நாட்டின் பன்முக தன்மையின் அடையாளம் தேசிய கொடி.

* விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி என்று கூறினார்.

Tags:    

Similar News