தமிழ்நாடு

ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்

Published On 2024-08-04 06:01 GMT   |   Update On 2024-08-04 06:01 GMT
  • யானை ஒன்று வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
  • யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது .

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தொன்ன குட்டஹள்ளி குட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சின்ன ராஜ். இவரது மகன் செல்வகுமார், இவர் அவருடைய விவசாய நிலத்தில் சுமார் 4 ஏக்கரில் வாழை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அடிக்கடி ஒற்றை யானை ஒன்று அவரது விவசாய நிலத்தில் உள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. அதேபோல் நேற்று இரவு ஒற்றை யானை வாழை தோட்டத்தை சேதப்படுத்தி விட்டு விவசாயி தூங்கி கொண்டிருந்த போது விவசாயியை தாக்கியுள்ளது. அருகிலுள்ள விவசாயிகள் இதனைக் கண்டு சத்த மிட்டத்துடன் பட்டாசுகளை வெடித்து அங்கிருந்து யானையை விரட்டி அடித்தனர்.

பின்னர் காயம் அடைந்த விவசாயியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது .

இந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News