தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

Published On 2022-10-17 09:55 GMT   |   Update On 2022-10-17 09:55 GMT
  • அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 51-வது ஆண்டு தொடங்குகிறது.
  • கட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆளுயர மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

சென்னை:

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 51-வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி தொடக்க விழா நிகழ்ச்சிகள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

காலை 10.30 மணி அளவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகம் வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் அவரை வரவேற்று நிரந்தர பொதுச்செயலாளர் வாழ்க, புரட்சி தலைவி ஜெயலலிதா வாழ்க, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.

அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆளுயர மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். அதைத்தொடர்ந்து கட்சி கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் தலைமை கழகத்துக்குள் சென்று தனது அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பி.ஜே.குமார், கே.பி.முனுசாமி, தம்பிதுரை, பா.வளர்மதி., செங்கோட்டையன், எம்.ஆர். விஜயபாஸ்கர். எஸ்.பி. வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வைகை செல்வன், கோகுல இந்திரா, டாக்டர் எஸ்.விஜயபாஸ்கர், கே.பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, கே.பி.கந்தன், விருகை ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, ராஜேஷ், அசோக், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், மாநில துணைச் செயலாளர், இ.சி.சேகர், மலர்மன்னன், எ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சைதை சுகுமார், ஷேக் அலி, வெற்றிவேல், வேளச்சேரி மூர்த்தி, எம்.ஜி.ஆர்.நகர் குட்டி, வக்கீல் சதாசிவம், கதிர் முருகன் மற்றும் சின்னையன், வளசை டில்லி.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நல்லாசியோடு ஜெயலலிதா நல்லாசியோடு அ.தி.மு.க. 50-வது பொன்விழா ஆண்டை நிறைவு செய்து இன்று 51-வது ஆண்டு நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக எழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைமை கழகத்திலும் மிகச் சிறப்பாக எழுச்சியாக அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்புடன் மிகச் சிறப்பாக தொடக்க விழா ஆண்டை கொண்டாடினோம். நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News