தமிழ்நாடு (Tamil Nadu)

கல்பாக்கம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்- ஒருவர் பலி

Published On 2024-09-23 10:46 GMT   |   Update On 2024-09-23 10:46 GMT
  • விபத்து நடந்த அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.  தனது மருமகள் மோனிசா, 2 வயதான பேத்தி மோனிகா ஆகியோருடன் கல்பாக்கம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்., அப்போது வாயலூர் கிழக்கு கடற்கரை சாலை வலைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஒடியது, அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தார். மருமகளும், பேத்தியும் படுகாயம் அடைந்தனர். தகவலரிந்த சதுரங்கபட்டினம் போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்து உயிர் தப்பிய பெண், குழந்தை இருவரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதிரே வந்த காரில் வந்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News